உணர்வுகளால்
உருவான என்
உலகத்தில்
உயர உயர பறந்திட
வீழும் நொடியொன்றில்
விசுக்கென பற்றி
மேலிழுத்து சென்றாய்
வானம் தாண்டிய வெளியில்
பிரஞ்ஞைகள் அற்று சுற்றி திரிந்திட
கணப்பொழுதில்
கண்கள் தாண்டிப் போகிறாய்
கண்முன்னே நீ
காணாமல் போவதை
கண்ணுற்றவாறே
சிறகு குவிக்கிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment