Sunday, September 2, 2007

எல்லா ஊர்களிலும்
காக்கைகள் தவறுவதில்லை
வாரியட்குச்சிகள்
தேடி முட்கூடு செய்யவும்
ஓயாது இரைந்து
ஒருவாய் உணவு கேட்கவும்
குப்பைகள் குதறி
மரித்த எலிகள் புசிக்கவும்
வீட்டருகே பறந்து
உன் வரவு கூறவும்..

2 comments:

N Suresh said...

கவிதையில் கவலைகள் வெளிப்பட்டாலும் அது மௌனமாய் இருப்பதை காகத்திடம் சொல்லும் விதம் மிக அருமை

வாழ்த்துக்கள்
என் சுரேஷ்

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை