Tuesday, April 10, 2007

வழக்கமான இடத்தில் நான்
வசமிழந்து தான் போனேன்
கால் தொட்டு கை நீட்டியபோது
வாடிக்கையாய் போயிற்றென்றெண்ணியவாறே!

Saturday, April 7, 2007

ஆசைகள்.........
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....

அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!

முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...

Friday, April 6, 2007

நினைவு நீர்நிலையில்
சிறு கல்லாய்
உன் ஞாபகங்கள்...

யோசனை எதுவும்
தோன்றாமல் அழைக்கிறேன்
உன்னை...

ஏதோ ஒன்றை
கூறுவதாய் நீயும்,
கேட்பதாய் நானும்....

விளையாட்டாய் சொல்கிறாய்
அறிந்தாலும், நீயாகிவிட்டதால்
துடித்துதான் போகிறேன்..
வார்த்தை நெருப்புகள் பாய்ச்சி
குளிப்பாட்டுகிறாய் என்னை - நீ
குளிர்காய்வதற்காய்...!

சுழன்று எரியும் ஜுவாலையின்
முடிவில் கணன்று பரவும்
என் விருப்பங்களும்...

மழை விரும்பும் மண்ணாய்
மனம் விரும்புகிறது உன்னை
கண்ணீரில் கரையும் உன் உருவம்..

அனைத்தும் பொசுங்கிய
அனாதரவான வேளையில்
அடங்காது சுழலும் ஆசைகள் மட்டுமே ....
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....

என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..