வழக்கமான இடத்தில் நான்
வசமிழந்து தான் போனேன்
கால் தொட்டு கை நீட்டியபோது
வாடிக்கையாய் போயிற்றென்றெண்ணியவாறே!
Tuesday, April 10, 2007
Saturday, April 7, 2007
ஆசைகள்.........
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....
அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!
முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....
அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!
முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...
Friday, April 6, 2007
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....
என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....
என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..
Subscribe to:
Posts (Atom)