வரைமுறைகளும்
வரையரைகளும்
வரவேண்டாம்
நமக்குள்ளும்
நமது நட்புக்குள்ளும்...
இதுவென்றும்
அதுவென்றும்
பெயர் சூட்டவேண்டாம்
இன்னதென்றறியா
நமது பந்தத்திற்கு...
நாய் தூற்றும்
நரி தூற்றும்
என்று புதைக்க நினைத்தாலும்
முல்லையாய் சிரித்து
முழுவதுமாய் ஆக்ரமிக்கும்
நமது நட்பை
எங்கிட்டு அடைப்பது
என் மனம் மறக்கும் வண்ணம்?
Wednesday, October 24, 2007
Wednesday, October 3, 2007
Sunday, September 2, 2007
Monday, August 27, 2007
சிறு வயது முதலே
சிநேகிதம் கொண்டோம்
உனக்குள் ஒளிந்த
பாட்டியின் முகதேட்டல்
நிழலாய் தொடரும் இன்றும்...
உன் பிம்பம் தொடவே
நீர் இறைக்கிறேன் நித்தமும்
சலனமற்ற அதிர்வுகளில்
சந்தோஷம் கண்ட நினைவுகள்
நீங்குவதில்லை என்றுமே....
மனம் சோர்ந்த மாலைகளில்
ஒளி பாய்ச்சி என் உள்ளத்து
இருள் துடைத்து
மெளனியாய் கூறுகிறாய்
துணை நானென்று...
எனது சோகம், கண்ணீர்
சந்தோஷம் இப்படி
உணர்ந்த உணர்வுகளுக்கு
எல்லாம் என்றும்
நீ மட்டும் சாட்சியாய்...
மனம் கனத்த வேளையில்
கடந்து போன நியாபகங்களின்
மிச்சமாய் காணும் ஆவலில்
வெளிவந்தேன்
நீயற்ற வானம் வரவேற்றது...
மனம் மாறும் மனிதர்
நிறம் மாறும் பூக்கள்
நிஜம் தொலைக்கும் உறவுகள்
கண்டு நீயும் மறந்தாயோ
நம் நீண்ட கால நட்பினை?
நிலவே முகம் காட்டு...
சிநேகிதம் கொண்டோம்
உனக்குள் ஒளிந்த
பாட்டியின் முகதேட்டல்
நிழலாய் தொடரும் இன்றும்...
உன் பிம்பம் தொடவே
நீர் இறைக்கிறேன் நித்தமும்
சலனமற்ற அதிர்வுகளில்
சந்தோஷம் கண்ட நினைவுகள்
நீங்குவதில்லை என்றுமே....
மனம் சோர்ந்த மாலைகளில்
ஒளி பாய்ச்சி என் உள்ளத்து
இருள் துடைத்து
மெளனியாய் கூறுகிறாய்
துணை நானென்று...
எனது சோகம், கண்ணீர்
சந்தோஷம் இப்படி
உணர்ந்த உணர்வுகளுக்கு
எல்லாம் என்றும்
நீ மட்டும் சாட்சியாய்...
மனம் கனத்த வேளையில்
கடந்து போன நியாபகங்களின்
மிச்சமாய் காணும் ஆவலில்
வெளிவந்தேன்
நீயற்ற வானம் வரவேற்றது...
மனம் மாறும் மனிதர்
நிறம் மாறும் பூக்கள்
நிஜம் தொலைக்கும் உறவுகள்
கண்டு நீயும் மறந்தாயோ
நம் நீண்ட கால நட்பினை?
நிலவே முகம் காட்டு...
Wednesday, June 20, 2007
உயரத்தில் பிறந்து
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..
Tuesday, June 12, 2007
Sunday, June 10, 2007
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...
முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..
யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
உனக்காக ஒரு கவிதையை..
உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...
முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..
யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
Saturday, June 2, 2007
Thursday, May 31, 2007
Thursday, May 24, 2007
யாரோ செய்கின்ற தப்பிற்கு
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...
நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...
உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...
உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....
அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...
நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...
உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...
உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....
அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...
Monday, May 21, 2007
Thursday, May 17, 2007
Monday, May 14, 2007
Thursday, May 10, 2007
Wednesday, May 9, 2007
Monday, May 7, 2007
Sunday, May 6, 2007
Saturday, May 5, 2007
Tuesday, May 1, 2007
Tuesday, April 10, 2007
Saturday, April 7, 2007
ஆசைகள்.........
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....
அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!
முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....
அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!
முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...
Friday, April 6, 2007
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....
என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....
என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..
Sunday, March 25, 2007
புரியாத நட்பொன்று
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!
காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..
அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..
அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...
போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!
காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..
அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..
அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...
போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...
Thursday, March 22, 2007
Saturday, March 17, 2007
Tuesday, March 13, 2007
Thursday, March 8, 2007
துன்பங்கள் கண்டாலும்
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!
Saturday, February 24, 2007
காத்திருப்பு சுகம் என்று
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....
இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..
புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..
வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..
நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..
காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..
வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....
இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..
புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..
வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..
நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..
காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..
வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...
Friday, February 23, 2007
உற்சாகமாய் உணர்ந்தேன்
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....
Wednesday, February 21, 2007
Friday, February 16, 2007
Thursday, February 15, 2007
Sunday, February 11, 2007
Saturday, February 10, 2007
Thursday, February 8, 2007
ஞாபகங்கள் சிறகடிக்கும் போதும்..
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !
Sunday, February 4, 2007
பல நட்புகளை காணும் பொழுது
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..
தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…
வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…
பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…
நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !
இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..
தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…
வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…
பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…
நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !
இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…
Subscribe to:
Posts (Atom)