Wednesday, October 24, 2007

உணர்வுகளால்
உருவான என்
உலகத்தில்
உயர உயர பறந்திட
வீழும் நொடியொன்றில்
விசுக்கென பற்றி
மேலிழுத்து சென்றாய்
வானம் தாண்டிய வெளியில்
பிரஞ்ஞைகள் அற்று சுற்றி திரிந்திட
கணப்பொழுதில்
கண்கள் தாண்டிப் போகிறாய்
கண்முன்னே நீ
காணாமல் போவதை
கண்ணுற்றவாறே
சிறகு குவிக்கிறேன்...

No comments: