உயரத்தில் பிறந்து
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..
Wednesday, June 20, 2007
Tuesday, June 12, 2007
Sunday, June 10, 2007
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...
முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..
யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
உனக்காக ஒரு கவிதையை..
உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...
முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..
யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...
ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..
Saturday, June 2, 2007
Subscribe to:
Posts (Atom)