Tuesday, June 12, 2007

எட்டா தூரத்தில் நீ இருந்தாலும்
எட்டும் உன் குரலில் மகிழ்ந்து
என்னை மறக்கும் தருணத்தில்
ஒற்றையா இரட்டையா என்று
வினா தொடுத்து விதியின் பெயரில்
வெற்று சண்டை எய்கிறாய்..
என்னுள் நான் நொறுங்குவதை
உணராத காற்றாய்
கடந்து செல்கிறாய்..
என் முகத்தில் அறைந்த வண்ணம்...

1 comment:

N Suresh said...

காற்றின் விதியும் அதனிடமில்லை பாவம்...
கடலும் மரங்களும் அதை இந்த பாடு படுத்துகிறது..
அதை அறியாதவளா இந்த கவிதை???

அன்புடன்
என் சுரேஷ்