Sunday, June 10, 2007

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...

முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..

யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

1 comment:

N Suresh said...

கவிதைகள் எழுதாத போதும் கவிதாயனி உந்தன் கனவுகளிலும் வரும் கவிதைகள் விழித்ததும் தொலைந்து போவதே பல கவிதைகளின் மரணங்களின் காரணம்

மரணப்பட்ட கவிதைகள் மீண்டும் அவதரிக்க வாழ்த்துக்கள்
என் சுரேஷ்