Saturday, June 2, 2007

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது நட்பு..
நீயற்ற என் நாட்கள்
நிர்பந்தத்தோடு நகர்கின்றன...

காற்றாய் வந்தாய்
கனவாக உறைந்தாய்
காலம் கடந்திட்டாலும்
காயாது நட்பின் பசுமை...

வாழ்வின் நிதர்சனத்தில்
வழி மறந்த பறவையாய்
வலியோடு பறக்கிறோம்
வனாந்திரத்தில் தனித்திருக்கும்
நம் நட்பை காணாதது போல்...

2 comments:

N Suresh said...

வாழ்க்கைப் பயணத்தின் ஒரு நிகழ்வை மட்டும் சொல்லும் கவிதையது அறியாததா இனி வர இருக்கும் சந்தோஷ நிகழ்வுகளை...

வாழ்த்துக்களுடன்
என் சுரேஷ்

N Suresh said...

உள்ளங்களில் ஒளிந்திருக்கும்
உண்மை நட்பின் இலைகளின் ஓசையை
செல்லத் தென்றலோடு முத்தமிடவைக்கும் கவிதை கண்டு மகிழ்ந்தேன்...

பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன்
என் சுரேஷ்