Thursday, May 31, 2007

எத்தனை முயன்றாலும்
தவிர்க்க முடிவதில்லை
கப்பலிட்ட மழைநாளிலே
காலால் ஓடையில் துடுப்பிட்டு
மூழ்காத கப்பல் கண்டு
முழுக்க நனைந்த ஈரத்தினை...
கண்ணாடி வழியே
மழை ரசிக்கும்
மகனைப் பார்க்கையில்...

1 comment:

N Suresh said...

கவிதையின் மகனின் பயணங்கள் தாயின் கவிதையால் மகிழும்...

நல்ல கவிதை...

அன்புடன்
என் சுரேஷ்