Thursday, May 24, 2007

யாரோ செய்கின்ற தப்பிற்கு
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...

நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...

உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...

உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....

அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...

1 comment:

N Suresh said...

அருமை!

அன்பே அன்பு...

என் சுரேஷ்