Saturday, May 5, 2007

மறந்தனையோ என்று மருகி
மனம் வாடும் நேரங்களில்
வலிந்த புன்னகை என்னுள்
வாசமற்ற மலர் போல...

கோபங்கள் இருக்குமோ என்று
குழம்பி தவித்து விடைக்காய்
எஞ்சி நிற்கும் அத்தனை
வேலைக்களுக்கு இடையிலும்...

எதிர்பாரா பொழுதினில் செவி
எட்டும் உன் குரலால்
நெகிழ்ந்து பொங்கும் உணர்வுகளை
ஒப்படைக்க வார்த்தைகள் தேடுகிறேன்...

No comments: