Tuesday, May 1, 2007

எதிர்பாரா சந்திப்புகள் ஏனோ
எதிர்கொள்ள முடிவதில்லை சுலபத்தில்
நீ தான் என்று அறிந்தாலும்
நான் தான் என்று அறியதரவில்லை.

சந்தர்ப்பங்களின் சதி என்று
சமரசம் செய்தாலும்
நட்பென்ற பெயரில்
நரம்பினில் புகுந்த வேதனை
உள் சென்று உயிர் வரை குத்தும்
உன்னோடு பேசும் பொழுதுகளில் எல்லாம்...

No comments: