காத்திருப்பு சுகம் என்று
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....
இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..
புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..
வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..
நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..
காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..
வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...
Saturday, February 24, 2007
Friday, February 23, 2007
உற்சாகமாய் உணர்ந்தேன்
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....
Wednesday, February 21, 2007
Friday, February 16, 2007
Thursday, February 15, 2007
Sunday, February 11, 2007
Saturday, February 10, 2007
Thursday, February 8, 2007
ஞாபகங்கள் சிறகடிக்கும் போதும்..
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !
Sunday, February 4, 2007
பல நட்புகளை காணும் பொழுது
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..
தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…
வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…
பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…
நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !
இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..
தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…
வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…
பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…
நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !
இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…
Subscribe to:
Posts (Atom)