Friday, February 23, 2007

உற்சாகமாய் உணர்ந்தேன்
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....