Saturday, February 24, 2007

காத்திருப்பு சுகம் என்று
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....

இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..

புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..

வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..

நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..

காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..

வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...

1 comment:

ammuthalib said...

one of the best i have ever read