Thursday, February 8, 2007

ஞாபகங்கள் சிறகடிக்கும் போதும்..
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !

1 comment:

மஞ்சூர் ராசா said...

கவிதை நன்றாக இருக்கிறது.

மேலும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்.