Wednesday, February 21, 2007

நினைவுகளில் கலந்து
நீங்காது நின்றாய்
நெஞ்சில்...

அவசர சாரலாய்
சட்டென வந்து
பட்டென்று ஒட்டிக்கொண்டாய்

எத்தனை முறை
துவட்டிய போதும்
துளியின் மிச்சமாய்
என்னுள் ஒரு ஈரம்...
விடை கேட்டு விரட்டிக்கொண்டே...

6 comments:

நிலாரசிகன் said...

சில்வண்டின் ரீங்காரம்
சில்லென்ற தென்றலின் சுகமாய் மனதெங்கும் பரவுகிறது.

இயல்பான நடை இவரது
கவிதைகளின் யதார்த்த அழகினை
கூட்டுகிறது.

நிறைய எழுத வாழ்த்துக்கள்.

சில்வண்டு said...

நன்றி நிலா.. :)

Anonymous said...

he he he he he he

ப்ரியன் said...

அருமை சில்

Unknown said...

கவிதை நன்று!

தலைப்பு???

சில்வண்டு said...

நன்றி ப்ரியன்..

அருட்பெருங்கோ ! என் கவிதைகளுக்கு தலைப்பிடுவதில்லை.:) நன்றி..