புரியாத நட்பொன்று
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!
காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..
அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..
அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...
போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...
Sunday, March 25, 2007
Thursday, March 22, 2007
Saturday, March 17, 2007
Tuesday, March 13, 2007
Thursday, March 8, 2007
துன்பங்கள் கண்டாலும்
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!
Subscribe to:
Posts (Atom)