Saturday, March 17, 2007

அவசர உலகில்
அனாவசியமாய் நேரம் இழந்து
சண்டைகளுக்கான காரணங்களை
சடுதியில் தேடி களிப்புறுகிறாய்...!

வாய்புக்காய் தவம்புரிந்து
வாழ்க்கை தொலைக்கிறாய்..
வரைமுறைகள் காட்டி
முயலுக்கு கால் மூன்றென்கிறாய்

எத்தனையோ முறைகள்
முயன்றும் முடியாமல் விழிக்கிறேன்...
தூங்குவதாய் பாவனையில் இருக்கும்
உன்னை எழுப்ப இயலாமல்!

No comments: