Sunday, March 25, 2007

புரியாத நட்பொன்று
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!

காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..

அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..

அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...

போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...

1 comment:

Ken said...

அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..


சத்தியமான வார்த்தைகள்