Thursday, March 8, 2007

துன்பங்கள் கண்டாலும்
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!

No comments: