Tuesday, March 13, 2007

அடிக்கடி நான் அழைத்தபோதும்
என்றுமே நீ இருப்பதில்லை
என்னவென்று கேட்பதற்கு..

இன்றும் அப்படித்தான்
என்று அறிந்தபோதும்
அழைக்கத் துடிக்கும் மனம்..

என்னவாகிறேன் நான் என்று
விதிர்த்துப் போகிறேன்
விடைதருவாயோ என் விலாசமே?

No comments: