Friday, April 6, 2007

இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....

என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..

No comments: