Friday, April 6, 2007

வார்த்தை நெருப்புகள் பாய்ச்சி
குளிப்பாட்டுகிறாய் என்னை - நீ
குளிர்காய்வதற்காய்...!

சுழன்று எரியும் ஜுவாலையின்
முடிவில் கணன்று பரவும்
என் விருப்பங்களும்...

மழை விரும்பும் மண்ணாய்
மனம் விரும்புகிறது உன்னை
கண்ணீரில் கரையும் உன் உருவம்..

அனைத்தும் பொசுங்கிய
அனாதரவான வேளையில்
அடங்காது சுழலும் ஆசைகள் மட்டுமே ....

No comments: