Monday, May 7, 2007

புல்லாங்குழலின் இசையாய்
புகுந்தாய் நரம்பினுள்
உறங்கிப் போன உணர்வுகள்
எழுப்பி தாளமிட வைத்தாய்..
கண்மூடி களித்திருக்கையில்
காணாமல் போனாய்..
இசை வந்த திசை அறியாமல்
விசையற்ற எந்திரமாய் நான்...

1 comment:

Anonymous said...

நல்லாயிருக்குங்க சில் இதுவும்

-சுரேஷுபாபு