Monday, May 21, 2007

மனதிற்கு பசியெடுக்கிறது
எதை தின்றால் பசிதீரும்
என்று யோசித்து மடிகிறது மூளை...
சேர்த்து வைத்த உன் ஞாபகங்களை
சிறிது சிறிதாய் பிய்த்து
தின்ன ஆரம்பிக்கிறது மனசு..
எதுவுமற்ற வெறுமையில்
என்ன கிடைக்கும் என்று
தடுமாறும் மனதிற்கு
நீ அளித்த பிரிய உணவு ஏனோ
புசிக்கப் பிடிப்பதில்லை.....

1 comment:

N Suresh said...

மனம் நிறைந்தால்
வயிறு மகிழும்...பிறகேது பசி..

நல் வாழ்த்துக்கள்
என் சுரேஷ்