Tuesday, May 1, 2007

புரிதல் இல்லா வாழ்வுதனில்
மெளனம் பழகுகிறோம்
நாட்களை கடத்தி விட..
நாளும் வளர்பிறையாயிற்று
நாம் கொண்ட மெளனம்....

தக்க தருணம் அமையுமென
காத்து நிற்கிறோம்
காதலை உள்ளடக்கி..
முட்டி மோதி உடைத்திட
வழி தேடி அலைந்திடும்...
தாங்க இயலா நொடியொன்றில்
உன் மெளனத்தால் கலையும்
என் மெளனம்

2 comments:

Anonymous said...

அருமையான கவிதை!
என் பதிவுல போட அனுமதி உண்டா?

Anonymous said...

நன்றி மதுரா..
போட்டுக்கோங்க.. உங்கள் வலைமுகவரி?