Thursday, May 10, 2007

காத்திருந்த நாளெல்லாம்
காரணங்கள் அடுக்கினாய்
உனக்காக என்றறிந்தும்
உணராததது போல்
உயிர்வதை செய்தாய் !

காணாமல் போக துணிந்தபின்
காத்திருக்கிறேன் என்றுகூறி
கண்ணீரில் ஆழ்த்துகிறாய்
காயப்படுத்துவதன்றி வேரொன்றும்
அறியாயோ உயிரே!!

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிலருக்கு வலி புரிவதில்லை.

கவிதை அருமையாக இருக்கிறது.

N Suresh said...

உண்மையை கவிதையிடம் சொல்லமுடியாமல்
இடிதாங்கின தன் இதயத்தை செப்பனிடுகிறானென்று
ஒருவேளை அறிந்தால் கவலைப்படுவாளோ கவிதையென்பதை அவன நினைத்து உருகுகிறானோ பாவம்!

அருமை!

என் சுரேஷ்